
அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் இராஜ் இராஜரட்ணம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்
இதன்படி இராஜ் இராஜரட்ணம் 28 ஆம் திகதி புதன்கிழமை யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலைகள் சேவைகள் பற்றி கலந்துரையாடினர்.
2006 ஆண்டில் இராஜ் இராஜரட்ணம் அவர்களின் நிதி உதவியானது இருதய சரித்திர சிகிச்சை பிரிவு எகோ இயந்திரம் உட்பட பல சேவைகளை புதிதாக ஆரம்பிக்க பெரும் உதவியாக இருந்ததென யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இராஜ் இராஜரட்ணம் எழுதிய “Uneven Justice” என்னும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ” விளைந்த நீதி” என்ற நூல் சில மாதங்களில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.