இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 20,000 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஒக்டோபர் 1ம் திகதி முதல் 7ம் திகதி வரையில் 8 ஆயிரத்து 614 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

அத்துடன், ரஷ்யாவில் இருந்து 14 சதவீதமானோரும், 10 சதவீத பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளும் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *