மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் இரு பயணிகள் பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் இவ்வாறு நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்து இன்று பகல் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கேகாலையிலிருந்து கண்டி நோக்கிப் பணியத்த தனியார் பஸ் வண்டியுடன் மாவனெல்லையிலிருந்து கேகாலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுமே மோதி வித்திற்குள்ளாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய இரண்டு பஸ்களினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனெல்லை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *