இலங்கையில் குரங்கம்மையுடன் மேலும் ஒருவர் அடையாளம்!

மங்கிபொக்ஸ் (monkeypox) எனப்படும் குரங்கம்மை தொற்றுறுதியான இரண்டாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த குறித்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக டுபாயிலிருந்து நாடு திரும்பியிருந்த ஒருவர், மங்கிபொக்ஸ் தொற்றுடன் கடந்த 3 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார்.

இவர் குரங்கம்மையுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நபராவார்.

களனி பகுதியைச் சேர்ந்த 20 வயதான அவர்  தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *