தலையை மறைக்கும் ஹிஜாப் ஆடை அணியாமல் பகிரங்கமாக தோன்றிய ஈரானின் பிரபல நடிகைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹேன்காமேஹ் காஸியானி மற்றும் கதாயோன் ரைஹி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானிய அரச அமைப்புகளுக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என ஈரானிய அரசின் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஹேன்காமேஹ் காஸியானி மற்றும் கதாயோன் ரைஹி (வலது)

ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட மாஷா அமினி எனும் 22 யுவதி பொலிஸ் காவலில் இருந்தபோது கடந்த செப்டெம்பர் 16 ஆம் திகதி உயிரிழந்தார்.

அதையடுத்து ஈரானில் பெரும் எண்ணிக்கையானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக நடிகைகள் ஹேன்காமேஹ் காஸியானி மற்றும் கதாயோன் ரைஹி ஆகியோர் தலையை மறைக்காமல் பகிரங்கமாக தோன்றியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *