உரத்தினை பகிர்ந்தளிக்க அரசாங்கம் தீர்மானம்

பெரும்போகத்திற்கு உரம் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அரசாங்கத்திற்கு சொந்தமான கொமர்சல் உர நிறுவனத்தின் வாயிலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக உரம் பகிந்தளிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பெரும்போகத்திற்கு தேவையான உரத்தினை கமநல சேவை மத்திய நிலையங்கள் வாயிலாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல பகுதிகளிலும் பெரும்போகத்திற்கான நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், சில மாவட்டங்களில் இம்மாதத்தின் மூன்றாம் வாரத்திலேயே ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *