( வாஸ் கூஞ்ஞ)
உலக உள நல தினமாகிய திங்கள் கிழமை (10.10.2022) அனைவரினதும் உளநல மற்றும் நல்வாழ்வை உலகளாவிய முன்னுரிமை யாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்ட உள நல பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரனையில் உலக உள நல தினம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அனுஷ்டிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட உள நல வைத்திய அதிகாரி வைத்தியர் பசில் ஜோகேஸ் லியோன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் வைத்தியர்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ உள நல பிரிவு பணியாளர்கள் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உள நல பிரிவில் கடமையாற்றும் பணியாளர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன..
கடந்த ஒரு வார காலமாக உள நல வாரம் கடைப்பிடிக்கப்பட்டதோடு பிரதேச ரீதியாக விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது