எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் குறைவடையலாம் ?

எதிர்வரும் வாரங்களில் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின்  விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர்  நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்  குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயுவிலைகளும் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *