யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் தாய், மகன் உள்ளிட்ட மூவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த தாயும், மகனும் மற்றும் அவர்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அயலவர் என மூவர் இன்று (நவ. 20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 15 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *