(எம்.மனோசித்ரா)

சுதந்திர தின நிகழ்வும் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் காலி முகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று கோட்டை நீதவான் திலிண கமகே உத்தரவிட்டுள்ளார்.

கல்லோய சிறிதம்ம தேரர், ஜோஜப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ உள்ளிட்ட 27 நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நீதவான் நேற்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சுதந்திர தின நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காலி முகத்திடல் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு , கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையங்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *