டயலொக் அனுசரணையில் 93ஆவது Battle of the Maroons

(என்.வீ.ஏ.)

 

இலங்கையின் முதன்மை பௌத்த கல்லூரிகளான ஆனந்த கல்லூரிக்கும் நாலந்த கல்லூரிக்கும் இடையிலான 93ஆவது ‘Battle of the Maroons’ கிரிக்கெட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் மார்ச் 4ஆம், 5ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

Battle of the Maroons  கிரிக்கெட்  போட்டியில்  69 வருட காத்திருப்பிற்கு பின்னர் கடந்த வருடம்  8 விக்கெட்களால் வெற்றிபெற்று கலாநிதி என்.எம். பெரேரா சவால் கிண்ணத்தை  நாலந்த கல்லூரி சுவீகரித்தது. அந்த கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு ஆனந்த கல்லூரி இம்முறை கடும் பிரயத்தனத்தில் ஈடுபடும் என கருதப்படுகின்றது.

இம்முறை ஆனந்த கல்லூரி அணிக்கு சிறந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் நெத்ம சமரவீர தலைமை தாங்குகிறார். அவர் தொடர்ச்சியாக 3 வருடங்களாக அணிக்காக விளையாடி வருபவர். அதேவேளை, நாலந்த கல்லூரி அணிக்கு சிறந்த வலது கை துடுப்பாட்ட வீரர் சனுல் அத்துகோரல தலைமை தாங்குகிறார்  . அவர் தொடர்ச்சியாக 4 வருடங்களாக அணியில் இடம்பெற்றுவருகிறார்.

இதுவரை இரண்டு கல்லூரிகளுக்குமிடையே நடைபெற்றுள்ள 2 நாள் போட்டித் தொடரில் ஆனந்த கல்லூரி 12 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கின்ற அதேவேளை, நாலந்த கல்லூரி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 73 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

இதேவேளை, இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான பி. டி எஸ். குலரத்ன  ஞாபகார்த்த சவால் கிண்ணத்திற்கான 46ஆவது வருடாந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 12ஆம் திகதி அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 45 போட்டிகளில் ஆனந்த கல்லூரி 26 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளதுடன் நாலந்த கல்லூரி 15 வெற்றிகளை பெற்றுள்ளது.

இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 93 ஆவது   Battle of the Maroons போட்டி, Dialog Television  அலைவரிசை இலக்கம் 140 இல் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும் ThePapare.com மற்றும் Dialog ViU app ஊடாக LIVE stream இல் பார்வையிடலாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அதிக எண்ணிக்கையிலான (55 க்கும் மேற்பட்ட) தேசிய கிரிக்கெட் வீரர்களை  ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி ஆகியன  உருவாக்கியுள்ளன.

அவர்களுள் இலங்கையின் முதலாவது டெஸ்ட் அணித் தலைவர் மறைந்த பந்துல வர்ணபுர, 1996 உலகக் கிண்ண சம்பியன் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் உட்பட ஐசிசி கிரிக்கெட் பொது மத்தியஸ்தர் ரொஷான் மஹாநாம, மார்வன் அத்தபத்து, மஹேல ஜயவர்தன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இலங்கை அணியை வழிநடத்திய பெருமைக்குரியவர்களாவர்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்தாட்டம், வலைபந்தாட்டம் மற்றும் Esports ஆகிய அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவகிறது. அத்துடன் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைபந்தாட்டம், பாடசாலை றக்பி, பராலிம்பிக் விளையாட்டுக்கள், இராணுவ பரா விளையாட்டுகள், மற்றும் உலக பராலிம்பிக் விளையாட்டுகளுக்கு இலங்கை அணியை வலுப்படுத்துதல் ஆகிய அனைத்திற்கும் அனுசரணை வழங்கி இலங்கை விளையாட்டுத்துறையுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றது. கடந்த காலங்களில் ப்றீமியர் லீக், சம்பியன்ஸ் லீக் ஆகிய காலபந்தாட்டப் போட்டிகளுக்கும் டயலொக் அனுசரணை வழங்கியிருந்தது.

 

 

படத்தில் இடமிருந்து வலமாக ஆனந்த கல்லூரி அணித் தலைவர் நெத்ம சமரவீர, போட்டிக்கான இணைக் குழுவின் ஆனந்த கல்லூரி தலைமை அதிகாரி பிமல் விஜயசிங்க, ஆனந்த கல்லூரி அதிபர் லால் திஸாநாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும நிகழ்ச்சி மேலாண்மை மற்றும் டெலி உட்கட்டமைப்பு தலைமை அதிகாரி  உபாலி கஜநாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இடர் மற்றும் இணக்கப்பாட்டு குழும  தலைவர்,   அசங்க  பிரியதர்ஷன, நாலந்த கல்லூரி அதிபர் திலக் வத்துஹேவ, இணைக் குழுவின் நாலந்த கல்லூரி தலைமை அதிகாரி வருண ரத்னவீர, நாலந்த கல்லூரி அணித் தலைவர் சனுல் அத்துகோரல ஆகியோரைக் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *