கொழும்பின் அண்மித்த பிரதேசம் ஒன்றில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படும் சிறுநீரகக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை ஒழுங்குமுறைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் தம்மிக்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த சிறுநீரகக் கடத்தலின் பிரதான தரகராக மோதரை காஜிமாவத்தையைச் சேர்ந்த ஒருவரெனவும் தெரிய வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் குடும்பங்களைத் தொடர்பு கொண்டு சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த நபர் வேறொரு தரகரால் அமர்த்தப்பட்டுள்ளார்.

தலா பத்து இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கஜிமாவத்தை, தொட்டலங்கை மோதரை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு பேரை குறித்த தரகர் இணைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *