துருக்கி சிரியாவில் பேரவலத்தை ஏற்படுத்தியுள்ள பூகம்பத்தில் மூன்று அவுஸ்திரேலிய பிரஜைகள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்களை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர் என வெளிவிவகார வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மெல்பேர்னை சேர்ந்த என்பவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது ஆனால் பெண்ணின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.
மெல்பேர்ன் நபரின் மரணம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள உறவினர் ஒருவர் பெருந்துயரமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் கிறிஸ்பொவன் தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.