நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டியில் வெள்ளிக்கிண்ண இறுதிப் போட்டியில் சன் பேர்ட்ஸ் அணி மற்றும் மூன் ப்ளைன் அணியினர் நேற்று முன்தினம் (5) சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் 4க்கு 2 என்ற கோல் கணக்கில் சன் பேர்ட்ஸ் அணியினர் வெள்ளிக் கிண்ணத்தை கைப்பற்றினர்.

இப்போட்டியின் முதல் பாதியில் சன் பேர்ட்ஸ் அணி 3.0 என முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் பாதியில் மேலும் சார்பாக ஒரு கோலினையும் சன் பேர்ட்ஸ் புகுத்தியது.

அதேவேளை மூன் ப்ளைன் அணி இரண்டாம் பாதியில் 2 கோல்களை புகுத்தியதன் மூலமாக 4க்கு 2 என்ற கணக்கில் சன் பேர்ட்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.

இப்போட்டியில் சன் பேர்ட்ஸ் அணி சார்பாக யோகேஸ்வரன் 1 கோல், மஹிந்தகுமார் 2 கோல்கள், ஜீவன் ராஜ் 1 கோல் என அடித்தமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *