(வாஸ் கூஞ்ஞ) 26.09.2022

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (25.09.2022) இரத்தினபுரியில் மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்இ அரசியல்வாதிகள்இ சர்வமதத் தலைவர்கள்இ பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *