பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் அமெரிக்காவின் பார்வை..!

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னெடுத்துச் செல்வது இலங்கைக்கு முக்கியமானது என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலத்துக்காக குரல் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ”இலங்கை அதன் ஜனநாயகம், அதன் ஆட்சி மற்றும் அதன் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான இன்றியமையாத நேரம் இதுவாகும்.

எதிர்காலத்திற்காக குரல்

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் அமெரிக்காவின் பார்வை..! | Local Government Election Commentary Us Mp

இதற்காக, மார்ச் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுப்பதும், நாடு முழுவதும் உள்ள மக்கள், அவர்களின் எதிர்காலத்திற்காக குரல் கொடுப்பதும் முக்கியமாக கருதப்படும்.

நல்லிணக்கம் தொடர்பான தேசிய உரையாடலை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சீர்திருத்தங்களை சர்வதேச தரத்திற்கு இணங்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *