
பாகிஸ்தானில் இன்று திங்கட்கிழமைம நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
பலோசிஸ்தான் மாகாணத்தின் போலான் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த தற்கொலை குண்டுதாரி, பொலிஸ் ட்ரக் ஒன்றின் மீது மோதியதாக பொலிஸ் அதிகாரி அப்துல் ஹை ஆமிர் தெரிவித்துள்ளார்.