
( வாஸ் கூஞ்ஞ)
மன்ஃவேப்பங்குளம் முஸ்லீம் மகா வித்தியாலயத்துக்கான புதிய அதிபராக ஏ.சி.சரிபுத்தீன் நியமனம் பெற்று வந்ததைத் தொடர்ந்து அவ் பகுதி மக்கள் அவருக்கு முஸ்லீம் கலாச்hரத்துக்கு அமைவாக அமோக வரவேற்பு அளித்தனர்.
மன்.வேப்பங்குளம் முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் அதிபராக ஏ.சி.சரிபுத்தீன் தாராபுரம் பாடசாலையிலிருந்து இவ் பாடசாலைக்கு இடம்மாற்றம் பெற்று வந்ததைத் தொடர்ந்து இவ் பாடசாலையின் நிர்வாகத்துடன் இணைந்து அவ்வூர் அமைப்புக்கள் , பெற்றோர் , பழைய மாணவர்கள் . நலன் விரும்பிகள் உட்பட பலர் இவ் புதிய அதிபரை வரவேற்றனர்.
வெள்ளிக்கிழமை (02.09.20220 நடைபெற்ற இவ் வரவேற்பு விழாவுக்கான சகல ஒழுங்குகளையும் இவ் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் பௌஸி சஹீட் தலைமையில் மேற்கொள்ள்பட்டிருந்ததாகவும் தெரிவிக்க்பட்டது.