(வாஸ் கூஞ்ஞ)
-கடந்த சில வாரங்களாக ஹட்டன் உள்ளிட்ட பெருந்தோட்டத்தின் முக்கிய நகரங்களில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வந்தபோதும் தற்பொழுது விலை குறைக்கப்பட்ட நிலையில் போதிய கோதுமை மாவை பெற்றுக்கொள்ள முடிகின்றது என அங்குள்ள நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக ஹட்டன் உள்ளிட்ட பெருந்தோட்டத்தின் முக்கிய நகரங்களில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததால் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஆனால் தற்பொழுது ஹட்டன் சதொச கிளைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு கோதுமை மா மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை வரம்பில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படிஇ இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி ஒரு கிலோ ரூ.185இ நாட்டு அரிசி ரூ.194இ லங்கா வெள்ளை அரிசி ரூ.210இ லங்கா நாடு ரூ.218இ சிவப்பு அரிசி ரூ.210இ பொன்னி சம்பா ரூ.194இ பழுப்பு சீனி ரூ.310இ வெள்ளை சீனி ரூ.279இ சிவப்பு பருப்பு ரூ.429இ நுவரெலியா உருளைக்கிழங்கு ரூ.398இ வெங்காயம் ரூ.175இ நெத்தலி ரூ.1350 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
சதொசவில் கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரம்பற்ற முறையில் விற்பனையாவதால்இ நாளாந்தம் அதிகளவான வாடிக்கையாளர்கள் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய வருவதாக சதொச கிளையின் கட்டுப்பாட்டு அதிகார சபை வட்டாரம் தெரிவிக்கின்றது