
வாஸ் கூஞ்ஞ) 24.08.2022
கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்று மற்றும் தாய்மார்கள் விடுதிக்கருகில் பொருத்தப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்து காணப்பட்டு இருந்தமையால் இவ் விடுதியில் இருந்தவர்கள் அவசர தேவைகளுக்காக குடிநிர் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கி இருந்தனர்.
இவ் இயந்திரம் பழுதடைந்திருந்த சமயம் இவற்றை திருத்தி அமைத்து நோயாளிகளின் பாவனைக்கு விடுவதற்கு நிதியின்மையால் பொது வைத்தியசாலை நிர்வாகம் நிதியின் எதிர்பார்ப்புக்காக காத்திருந்தது.
இந்த நிலையிலேயே இதை அறிந்த மன்னார் றோட்டறிக் கழகம் இவ் இயந்திரத்தை உடன் திருத்தி வைத்தியசாலையில் உள்ளவர்கள் நன்மை அடைவதற்கான நடவடிக்கையாக இவ் இயந்திரம் திருத்துவதற்கான நிதியாக 31200 ரூபா பெறுமதியான காசோலையை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளது
இவ் காசோலை கையளிப்பு நிகழ்வு செவ்வாய் கிழமை (23.08.2022) மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதற்கான நிதியுதவிகள் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் கந்தையா அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது