ஆடவர்களுக்கான இருபதுக்கு20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் சஹீன் ஷா அப்ரிடி விளையாடுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

தமது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் குறித்த தொடரில் விளையாடுவதில் சந்தேகம் உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், அவர் தற்போது லண்டனில் தமது மருத்துவ சிகிச்சைகளை நிறைவு செய்துள்ளார்.

திட்டமிட்டப்படி, அவர் எதிர்வரும் 15, 17 மற்றும் 19 ஆம் திகதிகளில், இடம்பெறவுள்ள பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளார்.

சஹீன் ஷா அப்ரிடியின் முதலாவது இருபதுக்கு20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இதுவாகும்.

எதிர்வரும் 23ஆம் திகதி மெல்பர்னில் இடம்பெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட முன்னர் அவரின் உடற் தகுதி மதிப்பிடப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *