கதிர்காமம், தெட்டகமுவ பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வேடிக்கையாக வாயு துப்பாக்கியால் சுட்டதால் அது தீப்பிடித்து ஐந்து வயது சிறுவனின் தலையில் தாக்கியதில் பாதிக்கப்பட்டு அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெட்டகமுவயைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனே காயமடைந்துள்ளார். இந்தச் சிறுவன் பாடசாலை ஒன்றில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.