நாட்டில் இன்று (01) முதல் கொவிட் மூன்றாவது தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன், முதற்கட்டமாகச் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
அவர்களில் இரண்டாவது கட்டமாகப் பாதுகாப்பு தரப்பினருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
தற்போது 2 மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
எனவே, தட்டுப்பாடின்றி தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனச் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.