நாட்டில் நேற்றைய தினம், 74,095 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, 56,923 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 1,135 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், நேற்றைய நாளில் 2,000 பேருக்கு மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சைனோபாம் முதலாம் தடுப்பூசி 2,196 பேருக்கும், இரண்டாம் தடுப்பூசி 9,840 பேருக்கும் செலுத்தப்பட்டன.
அத்துடன், 1,971 பேருக்கு அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியும், 30 பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.