அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு தேவையான சுமார் 2 பில்லியன் சிரின்ஜெஸ்களுக்கான பற்றாக்குறை ஏற்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இது நோய் தடுப்பை பாதிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட நிபுணர் லிசா ஹெட்மேன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு உபகரணங்கள் இன்மையால் தொற்று பரவலின் ஆரம்பத்தில் காணப்பட்ட பதுக்கல் நடவடிக்கைகள் மீளவும் இடம்பெறாமல், தவிர்ப்பதற்கு சுகாதார அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
உலகளவில் 6.8 பில்லியனுக்கும் அதிக கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.