விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் அனுமதியின்றி ட்ரோன் கெமராவை செலுத்தி ஒளிப்பதிவு செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (13) காலை விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் காலாட்படைப்பிரிவு முகாம் பகுதியில் அனுமதியின்றி பறக்கும் ட்ரோன் கெமராவை செலுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இராணுவ அதிகாரிகள் தெல்தெனிய காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொத்தடுவ மற்றும் களனி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று(14) தெல்தெனிய நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெல்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.