சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் கருணைக் கொலை செய்வதற்காக நவீன இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கமும் அனுமதி வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலை செய்யப்பட்டதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ‘டொக்டர் டெத்’ என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் வைத்தியருமான பிலிப் நிட்ச்கே என்பவர் வலியே இல்லாமல் கருணைக் கொலை செய்வதற்கான இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும்.
கருணைக் கொலைக்கு உட்படுத்தப்படுபவர்கள் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று உறங்கிய பின்னர், அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் அவர்களின் உயிர் பிரிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.