எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், தமக்கு அறிவிக்குமாறு வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே கோரியுள்ளார்.
இது தொடர்பில் தமக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்குமாறும் அமைச்சர் தனது தொலைபேசி இலக்கத்தையும் ஊடகவியலாளர்களிடம் முன்வைத்தார்.
இதன்படி, 077-7414241 என்ற கைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு குறித்த பிரச்சினை தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும், அப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் வாரத்திற்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.