முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் நிலான் ஜயதிலக்க எம்.பி ஆகியோரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் நிலான் ஜயதிலக்க எம்.பி ஆகியோர் கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
காலி முகத்திடலில் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கடந்த 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.