உலகளவில் குரங்கு அம்மை வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆபிரிக்க கண்டத்தின் கொங்கோவில் கடந்த 2019ஆம் ஆண்டு குரங்கம்மை தாக்கம் அதிகரித்தது.
இதற்கு சின்னமைக்கு அளிக்கும் மருந்தே அப்போது கொடுக்கப்பட்டது.
பிரித்தானியாவில் கொரோனா தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, அங்கு தற்போது குரங்கம்மை தாக்கம் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கு தடுப்பு மருந்து செலுத்த அந்நாட்டு சுகாதாரத் துறை முடிவெடுத்துள்ளது.
குரங்கம்மை தொற்று வைரஸ் மூலம் பரவும் நோயாகும்.
இது சின்னம்மையைப் போன்ற அரிய தொற்றுநோய்.
ஆனால் சின்னம்மையைவிட அதன் தாக்கம் சற்று குறைவு.
காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் கொப்புளங்கள் போன்றவை இந்த தொற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ், தோலின் மேற்புறத்தில் உள்ள உடைந்த உயிரிகள் மூலமாகவும், சுவாசக் குழாய் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.
மேலும் கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ள மியூகோஸ் திசுக்கள் மூலமாக பரவக்கூடும்.
உலகில் கொரோனா தாக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் தற்போது அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.