பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் வழங்கும் ஆதரவின் காரணமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தொட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் சகல தரப்பினரும் இன பேதமின்றி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
நாடாளுமன்றில் கட்சிக்கு ஒரு ஆசனத்தை கொண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராகியுள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தினரை பாதுகாப்பதற்காக அவர் பிரதமராகியுள்ளார்.
எனினும் பெசில் ராஜபக்ஷ ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க மறுப்பாராயின் மீண்டும் பிரதமர் பதவியிழக்க நேரிடும்.
இதன்படி, அதிகாரம் தொடர்ந்தும் பெசில் ராஜபக்ஷவிடமே உள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 43வது நாளாகவும் தொடர்கிறது.
அத்துடன், அலரிமாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் தொடர்கிறது.