
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் பதில் செயலாளரும், ஜார்கன்ட் மாநில கிரிக்கெட் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான அமிதாப் சௌத்திரி காலமானார்.
மாரடைப்பினால் அவர் தமது 58 ஆவது வயதில் ராஞ்சியில் இன்று காலமானார்.
இந்தநிலையில் அவரது மறைவுக்கு கிரிக்கட் துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்